முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

#Breaking

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு - முதலமைச்சர் உத்தரவு

ஏழை மக்கள் உயர்தர சிகிச்சை பெற உதவும் படி முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதுவரை தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் 2 லட்சம் வரை ஏழை மக்கள் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறலாம். தற்போது இதை முதலமைச்சர் 5 லட்சமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். எனவே தற்போது ஏழை மக்கள் தனியார் மருத்துவமனைகளில் வருடத்திற்கு 5 லட்சம் வரை கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ காப்பீடு என்றால் என்ன மெடிக்கல் இன்ஸ்சுரன்ஸ் ?

மருத்துவ காப்பீடு என்பது பொதுவாக வருடத்திற்கு 5 - 10 ஆயிரம் ரூபாய்  வரை நாம் காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தினால் 5 (கூடுதலா கட்டிணால் கூடுதல் தொகை) லட்சம் வரை நாம் எந்த மருத்துவமனைகளிலும் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். 5 லட்சத்தை காப்பீட்டு நிறுவனம் நமக்கு பதிலாக மருததுவமனைக்கு கட்டிவிடும்.

10 ஆயிரத்திற்கு 5 லட்சம் எப்படி காப்பீடு நிறுவனங்கள் கொடுப்பார்கள் இது எப்படி சாத்தியம் என சிலருக்கு கேள்வி எழலாம்.

1000 பேர் 10 ஆயிரம் கட்டியுள்ளார்கள் என வைத்துக் கொள்வோம். இதில் 1000 பேருக்கும் அந்த வருடம் நோய் ஏற்படாது. ஒரு சிலருக்கு தான் நொய் ஏற்படும். ஒரு சிலர் தான் சிகிச்சை பெற்றிருப்பார்கள். இதில் 5 லட்சம் வரை சிகிச்சை பெற்றவர்கள் மிகவும் குறைவாக தான் இருப்பார்கள். இதன் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் அடையும்.

மருத்துவ காப்பீட்டு திட்டம் என்பது பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டது. உதாரணமாக காப்பீடு எடுக்கும் முன்னர் ஏதும் நோய் இருந்தால் முதல் 5 வருடத்திற்கு அதற்கு இலவசமாக சிகிச்சை எடுக்க இயலாது. மேலும் சில நோய்கள் இதில் கவர் ஆகாது.

No comments:

Post a Comment

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...