* தாழை மலர் * (Pandanus fascicularis) தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது.

* தாழை மலர் * (Pandanus fascicularis)
தற்காலத்தில் தாழம்பூ என அழைக்கப்படுகிறது.




நீறு பூசியும் சிவன் தலையில் இடம்பெறவில்லை என குமரகுருபரர் பாடுகிறார்.
பொய் பேசியதால் தாழ்ந்தது தாழை.
சாகாமூலி சீந்திலுக்கும், ஆலமரத்துக்கும் உள்ள விழுதுகள் போல் தாழைக்கும் விழுதுகள் உண்டு.
மணமிக்க தாழம்பூ கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது, அம்மைநோய் கண்ட வீட்டில் தாழம்பூவை கட்டித்தொங்க விடுவதால் அக்கிருமிகள் அழிகின்றன. ஓலைச் சுவடிகளை பூச்சி அரிக்காமல் பாதுகாக்க தாழம்பூ பயன்படும்.
நீண்டவிழுதுகள் வீட்டுக்கு வெள்ளை அடிக்கவும், நார் ஊஞ்சலாடவும், இதன் ஓலையில் தாழைப்பாய் தயாரித்தும், பூவில் வாசணைத் தைலம் எடுத்தும் பயன்டுத்தினர்.
பாரம்பரிய நிலம் சார்ந்த மரங்களை அழித்து வருவதால் இயல்பான இயற்கை சூழ்நிலை மாறிவருகிறது, மண்ணரிப்பு, சுனாமி, கடல்சீற்றம் ஆகிய பேரிடரைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட தாழை மரங்களால் கடற்கரையில் நம்புதாளை, வேதாளை, தாழையூத்து, பூந்தாழை,தாழைக்காடு, தாழையூர், கூடுதாழை, பெரியதாழை என பல ஊர்கள் தாழையின் பெயராலே உருவாகியுள்ளன,
இயற்கையே உயிர்களுக்கு பாதுகாப்பு, இயற்கையை அழித்து செயற்கையாக நகரமைப்புகள் செய்வது சொந்த பனத்தில் சூணியம் வைத்துக் கொள்வதற்கு சமமே.




No comments:

Post a Comment

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...