உலக நாடுகளில் தமிழனின் பெருமையும் திறமையும் ஓங்கி நின்ற காலம் மாறிவிட்டதோ?
என் மக்களை மூடர்களாக்குவது யார்?
ஜனநாயகத்தில் போராட்டம் தேவைதானா?
என் மக்களின் உணர்ச்சிகளுக்கு தீணி போட்டு சட்டம் ஒழுங்கு காவல்துறை பாதுகாப்பு மருத்துவம் என அனைத்தையும் வேரோடு திசை திரும்பும் கலவாளிகள் யாரோ?
எட்டுக்கு ஒரு மஹான்கள் வாழ்ந்த இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் தமிழ்தாய் மண்ணில் கலவரத்தை விதைத்த விவசாயிகள் யாரடா?
ஆறாம் அறிவையும் கடந்து ஏழாம் அறிவுக்குள் பயணிக்கும் ஆற்றல் பொருந்திய என் சகோதரக் கூட்டத்தை மூடர்களாக்கியது யார்?
ஆண்களுக்கு மந்திரி போல் ஆலோசணை வழங்கியும்,
மழை பெய் என சொன்னால் பெய்த சக்தி கொண்ட என் சகோதரிகளை காவல்துறையை தாக்குவதே நம் லட்சியம் என மைக் பிடித்து பேசி அனைவரின் உணர்வுகளையும் தூண்ட செய்த விஞ்ஞானி யார்?
மழை பெய் என சொன்னால் பெய்த சக்தி கொண்ட என் சகோதரிகளை காவல்துறையை தாக்குவதே நம் லட்சியம் என மைக் பிடித்து பேசி அனைவரின் உணர்வுகளையும் தூண்ட செய்த விஞ்ஞானி யார்?
போராட்டம் போர்க்களம் கலவரம் நம் வளர்ச்சிக்கு தேவைதானா?
மக்களுக்காக மத்திய அரசிடம் போராட வேண்டியது மக்கள் அல்ல, மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளே?
மக்களை தூண்டி விட்டு கலவரத்தை உண்டாக்கிய நயவஞ்சகர்கள் ஸ்டெர்லைட் மீத்தேன் சாகர்மாலா போன்ற திட்டங்களை பொதுஜன கூட்டத்தில் நன்மை தீமைகளை விளக்கி அனுமதி பெற்றால் இப்படி ஒரு அவலநிலை வருமா?
மக்களுக்காக பாடுபட கைக்கூப்பி ஆட்சியில் உள்ள உத்தம வில்லன்களே.
கல்லனை கட்டிய கரிகாலன் வாழ்ந்த மண்ணில் தான் வாழ்கிறோம் என சிந்தியுங்கள்.
கல்லனை கட்டிய கரிகாலன் வாழ்ந்த மண்ணில் தான் வாழ்கிறோம் என சிந்தியுங்கள்.
என் மக்களே அனைத்து கட்சி தலைவர்களாக உள்ளோரும் சுயநலவாதிகளே, எவனும் மக்கள் நலனுக்காக பாடுபடவில்லை,
வேதனை வேதனை என்னால் கண்ணீர் மட்டுமே சிந்த முடிகிறது,
சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருந்தால் மட்டுமே நம் இனம் தழைக்கும்.
சத்திரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருந்தால் மட்டுமே நம் இனம் தழைக்கும்.
ஒரு காவல்த்துறையை சேர்ந்த பெண் இன்னும் நூறு பேர் செத்தாலும் பரவாயில்லை, இப்போது உயிர் நீத்த எட்டுப்பேருக்கு நீதி கிடைக்கும் வரை தீவிரமான போராட்டம் தேவை, எல்லாத்துறையை சேர்ந்த பாலிப நண்பர்களும் ஒன்று திரண்டு அரசுக்கு எதிரான போராட்டம் தேவை என்று சொல்வது தவறான கருத்து.
ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிவது நல்லதா?
ஏற்கனவே பற்றி எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றிவது நல்லதா?
முகநூல் மூலமாக பதிவின் மூலம் வெறி உணர்ச்சிகளை தூண்டாதீர்,

No comments:
Post a Comment