** நல்ல வேளை **
" Cleome gynandra "
நீண்ட காம்புடன் விரல்கள் விரிந்த மணமுடைய இலைகளையும் வெண்மையும் கருஞ்சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறுஞ்செடி. மழைக்காலங்களில்
சாலையோரங்களிலும், தரிசுகளிலும் வளர்கிறது. நல்வேளை தைவேளை என்றும் அழைப்பதுண்டு. இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயனுடையயவை.
" Cleome gynandra "
நீண்ட காம்புடன் விரல்கள் விரிந்த மணமுடைய இலைகளையும் வெண்மையும் கருஞ்சிவப்பும் கலந்த மலர்களையும் உடைய குறுஞ்செடி. மழைக்காலங்களில்
சாலையோரங்களிலும், தரிசுகளிலும் வளர்கிறது. நல்வேளை தைவேளை என்றும் அழைப்பதுண்டு. இலை பூ விதை ஆகியவை மருத்துவ பயனுடையயவை.
இலை நீர்கோவை நீக்கும் மருந்தாகவும், பூ கோழையகற்றிப் பசியுண்டாக்கவும், விதை இசிவு அகற்றியாகவும், வயிற்றுப் புழுக்கொல்லியாகவும், குடல் வாயுவகற்றியாகவும் பயன்படும்.
சமூலத்தை இடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக்கட்டி யெடுக்க நீர்க்கோவை,தலைப்பாரம், தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும்.
இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6,சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மி.லி. அளவாய் குடித்து வர வாதச்சுரம் சீதளச் சுரம் ஆகியவை தீரும்.
நல்ல வேளை இலைச்சாறு ஒரு துளி காதில் விட்டு வர சீழ்வருதல் நிற்கும்.
நல்ல வேளை இலையை அரைத்துப் பற்றுப் போடச் சீழ் பிடித்துக் கட்டிகள் உடைந்து ஆறும்.
பூச்சாறு 10 துளி தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழைந்தைகளுக்குக் கொடுக்கக் கபம்,
கணமாந்தம் சளி நிறைந்து மூச்சுத்திணறல், சுரம், நீர்கோவை ஆகியவை தீரும்.
விதையை நெய்விட்டு வறுத்து பொடித்து சிறுவர்க்கு அரை கிராம்,பெரியவர்க்கு 4 கிராம் வீதம் காலை மாலையாக மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள்
(விளக்கெண்ணையில்)
பேதிக்குக் கொடுக்கக் குடலிலுள்ள தட்டைப்புழுக்கள் கழியும்.
' மூலிகை அறிந்தால் மூவுலகை ஆழலாம் '
உங்கள் நலங் கருதி.
உங்க வீட்டு வேலன்.
சமூலத்தை இடுத்துப் பிழிந்துவிட்டுச் சக்கையைத் தலையில் வைத்துக்கட்டி யெடுக்க நீர்க்கோவை,தலைப்பாரம், தும்மல் தலையில் குத்தல் குடைச்சல் ஆகியவை தீரும்.
இலை 1 பிடி, சுக்கு 1 துண்டு, மிளகு 6,சீரகம் 1 சிட்டிகை சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி, தினம் 3 வேளை 50 மி.லி. அளவாய் குடித்து வர வாதச்சுரம் சீதளச் சுரம் ஆகியவை தீரும்.
நல்ல வேளை இலைச்சாறு ஒரு துளி காதில் விட்டு வர சீழ்வருதல் நிற்கும்.
நல்ல வேளை இலையை அரைத்துப் பற்றுப் போடச் சீழ் பிடித்துக் கட்டிகள் உடைந்து ஆறும்.
பூச்சாறு 10 துளி தாய்ப்பாலில் கலந்து பிறந்த குழைந்தைகளுக்குக் கொடுக்கக் கபம்,
கணமாந்தம் சளி நிறைந்து மூச்சுத்திணறல், சுரம், நீர்கோவை ஆகியவை தீரும்.
விதையை நெய்விட்டு வறுத்து பொடித்து சிறுவர்க்கு அரை கிராம்,பெரியவர்க்கு 4 கிராம் வீதம் காலை மாலையாக மூன்று நாள் கொடுத்து நான்காம் நாள்
(விளக்கெண்ணையில்)
பேதிக்குக் கொடுக்கக் குடலிலுள்ள தட்டைப்புழுக்கள் கழியும்.
' மூலிகை அறிந்தால் மூவுலகை ஆழலாம் '
உங்கள் நலங் கருதி.
உங்க வீட்டு வேலன்.

No comments:
Post a Comment