* புற்றுநோய் அறிகுறி கண்டவுடன் கைக்கொள்ள வேண்டிய மருந்து *

* புற்றுநோய் அறிகுறி கண்டவுடன் கைக்கொள்ள வேண்டிய மருந்து *
கடந்த 2012- ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஓர் கணக்கெடுப்பில் உலகில் மொத்தம் 14.1 மில்லியன் மக்கள் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகி
ன்றனர்.
இன்று மக்களிடையே சளி காய்ச்சல் போல மிக சாதாரணமாக ஏற்படக்கூடிய நோயாக புற்று நோய் உருவெடுத்துள்ளது.
அதிர்ச்சி தகவலாக 2035 ல் உலகில் 24 மில்லியன் மக்கள் இப்பாதிப்புக்கு ஆட்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறுகிறது.

அறிகுறிகள்-
தொடர்ந்து இருமல்.
இருமல் மிகச் சிறிய உடல்நல பாதிப்பு தான். ஆனால், தொடர்ந்து எந்த காரணமும் இன்றி இருமல் வந்து கொண்டே இருந்தால் அது நுரையீரல் / தொண்டை / தைராய்டு புற்று நோயாக இருக்க வாய்ப்புள்ளது.
திடீர் உடல் எடை குறைவு-
உடல் எடை திடீரென குறைய நிறைய காரணங்கள் இருக்கின்றன. தைராய்டு பிரச்சனை இருந்தால் கூட உடல் எடை குறைவு ஏற்ப்படும்.
சரியான காரணங்கள் இன்றி தீடீரென 4.5 கிலோ வரை உடல் எடை குறைவு ஏற்படுவது புற்றுநோய் அபாயத்தின் முதல் அறிகுறி. இது வயிறு, நுரையீரல், கணையம்,உணவுக்குழாய் புற்றுநோயாக இருக்கலாம்.
மார்பு பகுதியில் மாற்றங்கள்-
மார்பக புற்றுநோய் என்பது பெண்கள் மத்தியில் மட்டும் ஏற்ப்படுவதல்ல.
இது ஆண்களுக்கும் கூட ஏற்படும். மார்பு பகுதியில் திடீர் மாற்றங்கள் ஏற்படுவது கொப்பளம் போன்று தோன்றுவது, வீக்கம் நிறம் மங்குதல் போன்றவை ஏற்பட்டால் உடனே பரிசோதனை செய்வது நலம்.
சிறுநீர் மாற்றம்-
எல்லாருக்குமே சிறுநீரில் அவ்வப்போது நிறம் மாறுதல் சகஜம். ஆனால், நீண்ட நாட்கள் தொடர்ந்து சிறுநீர் நிறம் மாறியே வெளிப்படுதல் குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.
நிணநீர் கணுக்கள் வீக்கம்-
கழுத்து மற்றும் அக்குள் பகுதியில் நிணநீர் கணுக்கள் இருக்கும். சளி காய்ச்சல் சமயங்களில் இவற்றில் வீக்கம் தென்படும். ஆனால், தொடர்ந்து வீக்கம் இருக்குமானால் மருத்துவ பரிசோதனை நல்லது.
சருமத்தின் நிறம் மாறுதல்-
உங்கள் சருமத்தில் குறிப்பிட்ட வித்தியாசத்தில் அதிகநாள் மச்சம் புள்ளி வீக்கம் ஸ்கின் கேன்சர் அறிகுறியாகும்.
இதழ்-
உங்கள் இதழ் (உதடு) வெள்ளை/ சிகப்பு நிறத்தில் தடிப்புகள் தென்பட்டால் அது வாய் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
முக்கியமாக, புகை மற்றும் புகையிலை பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த அபாயம் ஏற்படும்.
களைப்பு / சோர்வு -
நாள் முழுக்க வேலை செய்தால் சற்று சோர்வாக உணர்வது இயல்பு. ஆனால், தொடர்ந்து களைப்பாகவே உணர்தல் புற்நோய்க்காண ஒரு அறிகுறி என்றாலும், இரத்தத்தில் சிகப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் உடல் சோர்வு ஏற்படும்.
வயிறு வீக்கம் ( பெண்கள்)
காரணமின்றி திடீரென வயிறு வீங்குதல் கருப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மேலும், இவ்வாறு ஏற்படும் போது முதுகு, இடுப்புவலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், குடல் இயக்த்தில் கோளாறுகள் கூட ஏற்படலாம்.
தொடர்ந்து இடுப்புவலி / முதுகுவலி (ஆண்கள்)
தொடர்ந்து முதுகுவலி இருந்து கொண்டே இருப்பது தண்டுவடம் பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறி. மேலும், பெருங்குடல் மற்றும் புரோஸ்டேட் தாக்கம் ஏற்பட்டிருந்தால் கூட இவ்வாறு தொடர்ந்து இடுப்புவலி ஏற்படலாம்.
இரத்தப்போக்கு ( பெண்கள்)
மாதவிடாய் காலத்தில் இன்றி, வேறு நாட்களிலும் இரத்தப்போக்கு அதிகமாக இருந்தால் அது ஏதேனும் நோய் தொற்று அல்லது கர்ப்பபை வாய் புற்றுநோய் அறிகுறியாக இருக்கலாம்.
இடுப்பு பகுதியில் மாற்றம் ( ஆண்கள் )
இடுப்பு பகுதியில் கட்டி / கடினமாக உணர்தல் போன்றவை விதை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஒருவேளை இது தொடர்ந்தால் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
" வருமுன் காப்போம் என்பதற்க்கு தான் இப்பதிவு "
இன்றைய காலம் குழந்தைகளுக்கு கொடுக்கும் சிறுதீனியில் கவணம் தேவை, அனைவரும் குடிக்கும் குடிநீரும் குளிர்பானங்களில் பெரிதும் மாற்றம் தேவை.
உங்கள் நலம் கருதி.
உங்க வீட்டு வேலன்.

No comments:

Post a Comment

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...