ஐயப்பனின் வேறு பெயர்கள் என்ன என்று தெரியுமா?

ஐயப்பனின் வேறு பெயர்கள்

மணிகண்டன்
பூதநாதன்
பூலோகநாதன்
தர்மசாஸ்தா எருமேலிவாசன்
ஹரிஹரசுதன்
ஹரிஹரன்
கலியுகவரதன்
கருணாசாகர்
லக்ஷ்மண பிராணதத்தா
பந்தள ராஜன்
பந்தளவாசன்
பம்பாவாசன்
ராஜசேகரன்
சபரி
சபரீஷ்
சபரீஷ்வரன்
சபரி கிரீஷ்
சாஸ்தா
வீரமணி
என்பவை எல்லாம் ஐயப்ப கடவுளின் வேறு பெயர்களில் முக்கியமானவைகளாகும்.

ஐயப்ப வழிபாடு
ஐயப்பன் மதங்களுக்கு அப்பாற்பட்ட கடவுளாக பாவிக்கப் படுகிறார். இன்றும் ஐயப்பனின் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் எருமேலியிலுள்ள முன்னாளில் கொள்ளைக்காரனாக இருந்து அய்யப்பனின் அருளால் திருந்தி அவரது நண்பராக மாறிய வாவரின் தர்காவிற்கு சென்ற பின்னரே ஐயப்பனை தரிசிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஐயர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - ஐயனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு ஆரியங்காவு என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.

ஒரு காலத்தில் எனக்கு பிடித்த பேச்சாளர் .....

ஒரு காலத்தில்  எனக்கு  பிடித்த பேச்சாளர்

கருணாநிதிக்கு எதிராக  20 மாவட்ட செயலாளர்களை திரட்டியவர்


அப்போது கூடிய கூட்டத்தை பார்த்து மலைத்து போனவன்

அறிவாலயத்தை பிடிக்கப்போகிறார் என்ற தகவல் பரவியதும் வாயிற்கதவை பூட்டிவிட்டு பின்பக்க வழியாக கோபாலபுரத்திற்கு கலைஞர்  தப்பி ஓடிய தருணம்

இன்று ஏன் இப்படி சின்ன பையன்களிடம் சின்னாபின்னமாகி போகிறார்

மதிமுகம் என்ற அவருடைய கட்சி தொலைக்காட்சியில் அவருடைய பேட்டியை பார்த்தேன்

உண்மையில் மனிதர் அழுதே விட்டார்

என்னை ஏன் இப்படி துரத்துகிறார்கள்

நான் செய்த தவறு தான் என்ன

இந்த தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் நான் செய்த ஊழியத்துக்காகவாவது என்னை மதிக்க வேண்டாமா

எல்லா ஊடகங்களும் என கேவலப்படுத்துகின்றன

மனிதர் கொந்தளித்துவிட்டார்

மதியாதார்  வாயில்  மிதியாதே என்பதை மறந்ததன் விளைவு 

ஆனால் திமுகவை மட்டுமே  பழி சொல்லி முடியாதே

2006 தேர்தல்  திருச்சியில் திமுக கட்சிகள்  கூட்டணி மாநாடு

வைகோவிற்கு 31 சீட்டுகள்  இரவு 7 மணிக்கு  வைகோ மேடைக்கு வரவேண்டும்

கட் அவுட்டுகள் வைகோவிற்கு  வைக்கப்பட்டன

சரியாக 7 மணிக்கு வைகோ  சென்னையில் ஜெ விற்கு பூங்கொத்து கொடுக்க அங்கு 35 சீட்டுகள்

அவரது கட் அவுட்டுகள் மாநாட்டு பந்தலில் தீயிட்டு கொளுத்தப்பட்டன

அன்றே திமுக முடிவு செய்தது இவரை ஒழித்து கட்ட

2011 மீண்டும் இரண்டு பக்கமும் ஊசலாட்டம் இந்த முறை ஜெ அவருடைய கதையை முடித்தார்

 இன்று கோமாளியாகிப்போனது எல்லோருக்கும் தெரிகிறது அவரை தவிர

 யார் மீது கோபப்பட வேண்டுமோ  அவரை விட்டு விட்டு மோடியை அநாகரீகமாக  பேசி இன்று அரசியலில் தனிமைப்படுத்த பட்டார்

ஒரு ஊடக நண்பரிடம் பேசிய போது  அவர் சொன்னது

இது திமுக திட்டமிட்டு செய்தது இனி வைகோ பாதை பெரியார் பாதை என்றார்
திருமாவளவனுக்கும் கல்தா என்றார்

வைகோ இப்படி ஒரு வீழ்ச்சியை சந்தித்தது எனக்கு சிறிது வருத்தமே காரணம் அவருடைய தமிழ் உரை

2006 வேறு 2019 வேறு என்று உணர தவறி விட்ட மனிதர் இன்று குப்பை மேட்டில்   

அவர் அரசியல்  வாழ்வு முடிவுக்கு வந்தது

Kumar Kandasamy

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது - சிறு கதை...

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது - சிறு கதை

அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார்.

பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார்.

வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது.

பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர்.

" இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர்.

" இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை தருவதெல்லாம் நியாயமாகாது. தயவு செய்து காசோலையை கொண்டு செல்லுங்கள்" என்றார் பெயின்டர்.

" நண்பரே... உங்களுக்கு விடயம் புரியவில்லை. நடந்த விடயத்தைச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று சொல்லி விட்டு படகு உரிமையாளர் தொடர்ந்தார்.

" நான் உங்களை படகுக்கு பெயின்ட் அடிக்கச் சொல்லும் போது அதில் இருந்த ஓட்டை பற்றிச் சொல்ல மறத்துவிட்டேன்.

பெயின்ட் அடித்துவிட்டு நீங்களும் போய்விட்டீர்கள். அது காய்ந்த பிறகு எனது பிள்ளைகள் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கக் கிளம்பிவிட்டார்கள்.

படகில் ஓட்டை இருந்த விடயம் அவர்களுக்குத் தெரியாது. நான் அந்த நேரத்தில் அங்கு இருக்கவுமில்லை.

நான் வந்து பார்த்த போது படகைக் காணவில்லை. படகில் ஓட்டை இருந்த விடயம் அப்போதுதான் நினைவுக்கு வர நான் பதறிப் போய்விட்டேன்.

கரையை நோக்கி ஓடினேன். ஆனால் எனது பிள்ளைகளோ மீன் பிடித்து விட்டு மகிழ்ச்சியாக திரும்பிவந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கணம் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் அளவேயில்லை.

உடனே படகில் ஏறி ஓட்டையைப் பார்த்தேன். அது நேர்த்தியாக அடைக்கப்பட்டிருந்தது. இப்போது சொல்லுங்கள். நீங்கள் செய்தது பெறுமதியற்ற சிறியதொரு வேலையா? நீங்கள் என்னுடைய பிள்ளைகளின் விலைமதிக்க முடியாத உயிர்களையல்லவா காப்பாற்றியிருக்கிறீர்கள்? உங்களது இந்தச் 'சிறிய' நற்செயலுக்காக நான் எவ்வளவுதான் பணம் தந்தாலும் ஈடாகாது." என்றார்.

நண்பர்களே... இதிலிருந்து என்ன புரிகிறது. யாருக்கு எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிரதிபலன் பாராது உதவுவோம். பிறரின் கண்ணீரைத் துடைப்போம். நம் கண் முன்னே தெரியும் ஓட்டைகளை கவனமாக அடைப்போம். அப்போதுதான் நமது ஓட்டைகளை அடைப்பதற்கான மனிதர்களை இறைவன் அறியாப் புறத்திலிருந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்ப்பான்.

(ஆங்கிலக் கதையொன்று. பிடித்திருந்ததால் மொழிபெயர்த்தேன். உங்களுக்கும் பிடித்திருந்தால் பகிருங்கள்)

திமுக ஈவே ராமசாமி காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம் - தவிர உன்னைப் போல் சில பூச்சாண்டிகளுக்கு பயப்படாது மாரிதாஸ். உன்னால் ஒன்றும் ..... முடியாது மாரிதாஸ்" என்று நாகரீகமாக ஏகவசனத்தில் விமர்சனங்கள் அனுப்பிய திராவிட கழக கண்மணிகளுக்கு ...

"திமுக ஈவே ராமசாமி காட்டிய வழியில் தொடர்ந்து பயணிப்போம் - தவிர உன்னைப் போல் சில பூச்சாண்டிகளுக்கு பயப்படாது மாரிதாஸ். உன்னால் ஒன்றும் ..... முடியாது மாரிதாஸ்" என்று நாகரீகமாக ஏகவசனத்தில் விமர்சனங்கள் அனுப்பிய திராவிட கழக கண்மணிகளுக்கு


"நேற்றுவரை விடுமுறை தினம் என்று இந்துக்களின் பண்டிகைகளை மட்டும் விளம்பரம் செய்த உங்கள் கலைஞர் டீவி தான் இன்று தீப ஒளித் திருநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் என்று விளம்பரம் செய்கிறது".

எதற்கு இந்த மாற்றம்??? எதுவும் செய்ய முடியாது என்றும் எதுவும் இல்லை இங்கே.... அதுவும் வோட்டுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் திமுக போன்ற அரசியல் கம்பெனி நடத்தும் கூட்டத்தை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். என்ன கொஞ்சம் அழுத்தம் கொடுக்க வேண்டும் சரியான இடத்தில் சரியான திசையில்...

திராவிட கொள்கையையும் சரி , வைக்கம் வீரர் என்று ஈவே ராமசாமி வச்சு நீங்க அளந்துவிட்ட அனைத்துப் பொய் கதைகளையும் சரி அனைத்தையும் குழிதோண்டி புதைக்கும் நாள் நெருங்குகிறது. இன்னும் கொஞ்சம் நாள் பொறுங்கள் தேர்தல் வரும் போது ஒட்டுமொத்த 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஒரு வீடியோ விதமாக 234 வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் எனது குழுவினர்.

மனித நேயம் மக்கள் கட்சியை கூட்டணியில் வச்சுகிட்டு மதச்சார்பின்மை பேசுறேங்க???? இருங்க உங்களுக்கு இருக்கு..

வெளிப்படையாகவே கூறுகிறேன் :

"எமது லட்சியம் ஒரு ஓட்டு கூட சபரிமலை ஐயப்பன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் வீட்டில் இருந்து திமுக என்ற கட்சிக்கு போகக் கூடாது. காரணம் உங்கள் திக வெளிப்படுத்தும் இந்துமத வெறுப்பு பிரச்சாரம்".
---------------------------------
நன்கு புரிந்து கொள்ளுங்கள் :

மற்ற மத நம்பிக்கைகளை மதிப்பது போல் இந்து மத ஆன்மீக நம்பிக்கைகளையும் மதிக்க முன்வாருங்கள் இது தான் என் வேண்டுகோள். அவ்வளவு தான் விஷயம். எனக்கும் திமுக கட்சிக்கும் என்ன விரோதம்? எதுவும் இல்லை. என் தாய் கொண்ட நம்பிக்கையை அவமானம் செய்யும் விதமாக திக கூட்டம் பேசி திரியும் அதைப் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா???? அந்தக் கோபம் தான் எனக்கு உங்கள் மீது. மற்றபடி கலைஞர் டீவியின் இந்த மாற்றத்தை நான் வரவேற்கிறேன். மாற்றம் தொடரவில்லை என்றால்

"திக இயக்கத்தின் இந்துமத வெறுப்பு பேச்சால் திமுக அழிந்தது என்று வரலாறு எழுதப்படும்".

{சின்ன அறிவுரை: ஸ்டாலின் அவர்களே முதலில் திக-பெரியார் கூட்டத்தை விரட்டி விடுங்க... இல்ல அவனுக வாய் ஒன்று போதும் உங்கள் தோல்வியை உறுதி செய்ய...}

-மாரிதாஸ்

தற்சமயம் ரஜினி அவர்கள் பேசிய பேச்சைத் திரித்து கூறியுள்ள இந்தச் செய்தி ஊடகங்கள் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன??? {கேள்வி : நிர்மல்}

தற்சமயம் ரஜினி அவர்கள் பேசிய பேச்சைத் திரித்து கூறியுள்ள இந்தச் செய்தி ஊடகங்கள் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன??? {கேள்வி : நிர்மல்}


 Headline Strategies Psychology அப்படினு ஒன்னு இங்கே இருக்கு. அது என்னவென்று கூறும் முன் ஒருவிஷயம்

தீபாவளி அன்று ஜீ தொலைக்காட்சியில் வெளியான ரஜினி அவர்களின் பேட்டி மிக எதார்த்தமாக இருந்தது என்றும் - அதில் ரஜினி அவர்களின் பேச்சு அருமையாக மிகவும் வெளிப்படையாக இருந்தது என்றும் "BMW கார் வச்சுருக்கேன் , ஸ்டார் ஹோட்டல்களில் சாப்பிடுகிறேன் , வீடு போயஸ் தோட்டத்தில் இருக்கு ---- நான் எப்படிங்க எளிமையா இருகேனு சொல்ல முடியும்? என்று கூறியது மிக மிக எதார்த்தமான உண்மை பேச்சு" என்று என் அம்மா , அண்ணா அனைவரும் கூறினர். "இப்படி வெளிப்படையாக தங்கள் வாழ்க்கையைக் கூறிவிட்டால் மக்களும் ரசிகர்களும் எதார்த்தம் புரிந்து வாழ்வார்கள் என்று" அந்தப் பேட்டியை பார்த்த அனைவருமே இதே கருத்தை தான் கூறினர்.

அப்போது என் அம்மாவிடம் நான் கூறினேன் "ரஜினி அவர்களுக்கு இந்தப் பேட்டி மக்களிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் என்றால் இன்னும் இரண்டு நாளில் அவர் பெயரை கெடுக்கக் கண்டிப்பாக எதாவது செய்தியை செய்தி நிறுவனங்கள் அதுவும் புதிய தலைமுறை , நீயுஸ் 7 , ஆனந்த விகடன் , தி இந்து போன்ற செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியிடுவார்கள்". கொஞ்சம் பாருங்கள் என் கணிப்பு சரியாக இருக்கும் என்றேன். 

அதே போல் விரைவு செய்திகள் வந்தன:

நியூஸ் 7 செய்தி--------------- "7பேரை தெரியாதவர் 7 கோடி பேருக்கு தலைவர் ஆவாரா"??
சன் டீவி ---------------- "பாஜக ஆபத்தான கட்சி தான் என்று ரஜினி கூறினார்".
புதியதலைமுறை -------------"7 பேர் யார் என்றே தெரியாது என்றார் ரஜினி". பரபரப்பு செய்திகள்...

இந்தச் செய்திகளை கொஞ்சம் விட்டு விட்டு அந்தத் தலைப்புகளை அனைவரும் கொஞ்சம் கவனிக்கவும். அதில் தான் செய்தி நிறுவனங்களின் எண்ணமே இருக்கிறது. இது எல்லாமே செய்தி நிறுவனங்கள் மேற்கொள்ளும் Headline Strategies Psychology என்ற கேடுகெட்ட தந்திரம்... செய்தியை வெளியிடாமல் - தங்கள் எண்ணத்தை எப்படி மக்கள் மனதில் விதைப்பது என்று அதற்குத் தக்க செய்தியின் தலைப்பை உருவாக்குவது பரப்புவது தான் அது.

"2016ல் கேரளா மாநிலத்தில் கொச்சியில் அசாம் மாநிலத்தைச் சார்ந்த தலித் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். 30 இடங்களில் சரமாரி வெட்டுக் காயங்கள். இந்தச் செய்தி பெரிய அளவில் விவாதமாக மாறவே இல்லை. காரணம் கேரளா கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலம் - கொலை செய்த நபர் அமீர் உல் இஸ்லாம் என்பவர்". இது விவாதம் அல்ல செய்தியாக கூடப் பெரிய அளவில் வரவில்லை. இதே நிகழ்வு உத்திரபிரதேசம் குஜராத் என்றால் ????கடந்த ஆண்டுகளில் திரிபுரா பற்றி என்றாவது செய்தி வந்தது உண்டா பாருங்கள்??? இப்போது வாரம் நாளு கெட்ட செய்தி வரும்,. காரணம் கம்யுனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது அங்கே பிஜேபி வந்தாகிவிட்டது எனவே இனி கெட்ட செய்தி மட்டுமே வரும். பெரும்பாலான செய்தி ஊடகங்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள்/ தமிழகத்தில் திராவிட சிந்தனையாளர்கள் வசம் இருப்பதால் தான் வரும் வினை இது.

சென்ற மார்ச் மாதம் குஜராத்தில் குதிரை வைத்திருந்ததால் தலித் தாக்கப்ட்டு உயிர் இழந்தார் என்று செய்தி வெளியிட்டது ஞாபகம் இருக்கும் அனைவருக்கும். ஆனால் அது உண்மை அல்ல இரண்டு நாட்களில் அந்த இளைஞர் குதிரை வைத்திருந்ததால் அல்ல மாறாக அந்தப் பகுதி பெண்களிடம் வரம்பு மீறி நடந்தார் அதனால் தாக்கப்பட்டு இறந்தார் என்று விசாரணையில் வெளியானது. ஆக வெட்ட வெளிச்சமாக பிஜேபி மீது தலித் , இஸ்லாமியர்களுக்கு வெறுப்பு வரவேண்டும் என்று தூண்டுவது தான் நோக்கமே அன்றி வேறு இல்லை இதில்.

எல்லோரும் ஹைதராபாத் ரோகித் வெமுலா தற்கொலை மட்டுமே பெரும் செய்தியாக்கினர் - ஆனால் பெங்களூர் அபிசேக் தற்கொலை செய்தியாக மாறேவே மாறாது... ஏன்??? எப்படி???? காரணம் ரோகித் கம்யுனிஸ்ட் மாணாவரணியில் இருந்தார் - அபிசேக் வலதுசாரி மாணவர்கள் அணியில் இருந்தார். எனவே ரோகித் வெமுலாவுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் ஆரம்பித்து எந்த யோக்கியனும் அபிசேக் மாணவர் இறப்புக்குக் குரல் கொடுக்கவே இல்லை.

இதை ஏன் கூறுகிறேன்????? செய்திகள் எப்படி பெரிதாக்குவது எதனால் பெரிதாக்குவது எல்லாமே இங்கே உள் நோக்கங்களுடனே திட்டமிடப்படுகிறது.

அது போல் வேலையைத் தான் ரஜினி அவர்களின் பேட்டியிலும் செய்துள்ளார்கள் செய்தி நிறுவனங்கள். இதை முதலில் நாம் மக்கள் உணரவேண்டும்.

விஜயகாந்த் அவர்கள் எப்படி வீழ்த்தப்பட்டார்???? அதே பாணியில் ரஜினி அவர்களை வீழ்த்தத் திராவிட இயக்கங்கள் செய்தி நிறுவனங்களைப் பின்புலமாக கொண்டு நகர்கிறார்கள். ஒன்று கேலி செய்வோம் - இல்லை வெறுப்பைப் பரப்புவோம் இது தான் இவர்கள் செய்தி நிறுவனம் நடத்தும் தொழில் தர்மம். இங்கே தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தாண்டி எவரும் அரசியல் செய்ய முடியாது. அப்படி அரசியல் செய்தால் எப்போது தேவையோ அப்போது பயன்படுத்திக் கொண்டு உங்களை நிர்மூலம் ஆக்குவது எப்படி என்ற கலையும் இங்கே இருக்கும் திராவிட கூட்டத்துக்கு இது நன்கு தெரியும்.

ரஜினி அவர்கள் கூறிய "அது எனக்குத் தெரியவில்லை... எதிர்க்கட்சிகள் அப்படி நினைக்கிறார்கள் என்றால் அப்படி தானே இருக்கும்" இந்த இரண்டு கூற்றை வைத்துக் கொண்டு எப்படி அவர் மீதே வெறுப்பை மக்களிடம் பரப்பலாம்?????? அதைத் தான் புதிய தலைமுறை முதல் நியூஸ் 7 வரை செய்தி நிறுவனங்கள் இங்கே செய்துள்ளார்கள். வேறு ஒன்றும் இல்லை.

{திக , கம்யுனிஸ்ட் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் நடத்தும் அனைத்துச் செய்தி ஊடகங்களும் இன்று ரஜினி முதல் எதிரி. காரணம் அவர் "ஆன்மீக அரசியல் - அவர் ஒரு தேசியவாதி".}

-------------------------------------------------------------------------------------------
முக்கியமான உண்மையை அனைவரும் கட்டாயம் உணர வேண்டும்.

1)2012ஆம் ஆண்டு இரண்டு தலைமை பத்திரிக்கையாளர்கள் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார்கள். காரணம் ஒரு தொழில் அதிபரை 20 லட்சம் பணம் கேட்டு மிரட்டினார்கள் என்று. அந்தத் தொழில் அதிபர் ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்திருந்தார் என்பது தகவல். அதற்கான ஆதார வீடியோ இந்தச் செய்தியாளர்களிடம் உண்டு.. அந்த வீடியோவை வைத்து மிரட்டி முதலில் சில லட்சம் பணம் பரித்துள்ளார்கள். அதன் பின் மீண்டும் பணம் கேட்டு மிரட்ட - புகாரின் பேரில் கைது.

இதில் முக்கியமான விசயம் என்ன தெரியுமா? இரண்டு செய்தியாளர்களுமே வேறு வேறு செய்தி நிறுவனந்தை சார்ந்தவர்கள் ABP News , India TV. அதாவது நொய்டாவை தலைமையிடமாக கொண்ட India TV பத்திரிக்கையாளரும் - கல்கொத்தாவை தலைமையிடமாக கொண்ட ABP News என்ற இரண்டு வேறுபட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கைது?

இது தான் இங்கே முக்கியும். இதற்குப் பெயர் : investigative journalism.

தொடர்ந்து ஒருவிவகாரத்தைப் பின் தொடர்ந்து முழுக் கதையையும் தெரிந்து மக்களுக்கு ஆதாரத்துடன் வெளியிட்டு செய்தியின் முழு உருவத்தை உடைத்துக் காட்டுவது. ஆனால் இந்தியாவில் இதற்குப் பெயர் "சமூகத்தில் பெரிய நபர்கள் பின்புலம் அவர்கள் ரகசியம் அவர்கள் கள்ள உறவு என்று தேடி அலைவது... இதன் மூலம் அந்த நபர்களை மிரட்டி காசு பிடுங்குவது... உங்கள் வாழ்க்கையையே நாசம் செய்வோம் என்று வெளிப்படையாக மிரட்டி காசு பறிப்பது தான் இங்கே investigative journalism. இதற்கு ஒரு குரூப் news agencies என்ற முழு நேரம் வேலை செய்கிறது.

இது ஒரு கூட்டாக உழைக்காமல் எப்படி அடுத்தவன் வீட்டு விவகாரத்தை வைத்து காசு சம்பாரிப்பது என்ற கூட்டம். பல விவகாரம் வெளியில் வரவே வராது... ஏன் என்றால் அனைத்துச் செய்தி நிறுவனங்களும் இந்தவிதமான கூட்டம் உண்டு. ஒருத்தருக்கு ஒருத்தர் இசைந்து போவது ஒரு தந்திரம். இரண்டு விசயம் இது தனி ஒரு பத்திரிக்கையாளர்கள் தவறு என்று நினைக்காதீர் , அடுத்து 20 லட்சம் தானே என்று நினைக்காதீர்..

Zee TV குரூப் இந்த நிறுவனத்தின் செய்தியாளர்கள் கூட்டம் ஜிண்டால் குழுமம் மீது தவறான விதமான செய்திகளை பரப்புவது மூலம் பெரும் முதலீட்டாளர்கள் இழப்பைச் சந்திக்க வேண்டி வரும் என்று மிரட்டினர்... முதல் தவணையாக 20கோடி வேண்டும் என்றும்... அடுத்து 100 கோடி மதிப்பிலான விளம்பரங்களை தங்களுக்கு தரவேண்டும் என்றும் மிரட்டினர். ஒருகட்டத்தில் செய்வதரியாது இந்த விவகாரம் வெடித்து வெளிவந்தது...

100 கோடி??????????

இங்கே இதே போல் தான் நித்தியானந்தர் வீடியோ விவகாரம் எல்லாம்.... இப்படி வீடியோ வைத்து காசு பறிக்க முய்ச்சிபது முடியாது என்றால் வெளியிட்டு அவமானம் செய்து அதன் மூலம் தங்கள் பிடியில் இருக்கும் மற்ற நபர்களை மிரட்டுவது... 1 கோடி இரண்டு கோடி எல்லாம் இல்லை, கைமாறினால் பல 100 கோடிகளைப் பறிப்பது... இங்கே நக்கீரன் எல்லாம் மிக மிகக் கொடூரமான செய்தி கூட்டம்... என்ன வேண்டுமானாலும் எழுதலாம் யார் மீது வேண்டாலும் எழுதுவோம். செய்தியே தேவை இல்லை ஸோர்ஸ் சொன்னது என்ற என்ன செய்தி வேண்டுமானாலும் எழுதுவது கேட்டால் கருத்து சுதந்திரம் பேசுவது...

சமூக ஆர்வலர் என்று திரிபவன் பலர் பின்புலத்தில் இந்தச் செய்தி நிறுவனங்கள் கூட்டு உண்டு... இயற்கை ஆர்வலர் என்ற பெயரில் போய் எதையாது சொல்லி போராட்டம் தூண்டலாம் - அதை ஆனந்த விகடன் போன்றவர்கள் விரிவாகச் செய்தி வெளியிட்டு மிரட்டுவர்... பெரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை முதலீட்டாளர்கள் மீது அச்சம் கொண்டு ஒரு காலத்தில் இவர்களுக்கு பெரும் தொகையை வழங்கி வந்தார்கள் என்பது தான் உண்மை. ஆனால் இப்போது ஒன்று இரண்டு என்றால் சரி... ஒரு டஜன் கூட்டமே செய்தி நிறுவனம் என்ற பெயரில் இறங்கி விட்டதால் நிறுவனங்கள் விலகி நிற்கிறார்கள். இங்கே இந்த இயற்கை ஆர்வலர்கள் என்று உழைக்காமல் சொகுசாக திரிந்து எந்நேரமும் இயற்கை என்று பேசி கதை அளப்பவனை நம்பாதே...

எனவே செய்தி நிறுவனங்கள் / பத்திரிக்கையாளர்கள் முதல் வியாபார நோக்கமே

"சமூகத்தில் அரசியல்வாதிகள் , திரைப்பட நடிகர்கள் - நடிகைகள் , விளையாட்டு வீரர்கள் என்று பிரபலமானவர்கள் , தொழில் அதிபர்கள் இப்படிப் பிரபலமான மனிதர்கள் பின்னால் இருக்கும் ரகசியத்தைத் தேடி தெரிந்து கொள்ள வேண்டும். அதை வைத்து மிரட்டி காசு பார்க்கவேண்டும்... இது நீக்கமற இந்த நாடு முழுவதும் எல்லாச் செய்தி ஊடகத்திலும் நடக்கிறது என்பது தான் உண்மை". இதில் பெண் பத்திரிக்கையாளர்கள் தனி ரகம்.

பணம் பரிப்பது மட்டும் தான் பணம் சம்பாரிக்கும் வழியா????

இல்லை அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அனைவரிடமும் அவர்களுக்கு ஆதரவாகச் செய்திகள் வெளியிடவும் பணம் பெறுகிறார்கள். பொதுவாகச் செய்தி நிறுவனங்கள் நல்ல விசயம் சொல்வதை விடக் கெட்ட விசயம் வேகமான எளிதாக மக்களுக்குப் பரப்ப முடியும். நாளு குடும்பம் நல்லா இருக்கு என்று செய்தி போட்டா பார்ப்பவர் விட நாடு குடும்பம் நாசமா போச்சு என்று போட்டால் பார்ப்பவர் அதிகம்.

எனவே இந்த எதிர்மறை பிரச்சாரம் தான் செய்தி ஊடகங்களின் பலமே தவிர நல்ல விசயங்கள் பேசுவது அல்ல.

"எந்தக் கட்சிகளுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் என்பது விஷயம் அல்ல. எந்தக் கடைசிக்கு எதிராகப் பேச வேண்டுமே என்பது தான் முக்கியம். இதை முடிவு செய்வது இந்த டீவி முதலாளிகள் - அதற்கு வேலை செய்வது அந்த முதலாளிகளுக்கு அவர்கள் வீட்டு நாய்க் குட்டி போல் வேலை செய்யும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் செய்தியாளர்கள் வேலை ". தேர்தல் நேரங்களில் முதல் செய்தி முதல் முடிவு செய்தி வரை அனைத்துக்கும் காசு வாங்கும் கூட்டமே இங்கே இருக்கு. {தேர்தல் வந்தால் மக்கள் குஷியாக இருப்பார்களோ இல்லையோ ஆனால் செய்தி நிறுவனம் அனைத்துமே செய்ய வருமானம் தான்.}

இது மட்டும் அல்ல சேர் மார்கெட் முதல் IPL கிரிக்கெட் போட்டி வரை அனைத்திலும் இவர்கள் செய்தி பரப்பி காசு சம்பாரிக்கும் யுக்தி அடக்கம். வெறும் விளம்பரம் மட்டும் தான் இவர்கள் வருமானம் என்று நினைக்க வேண்டாம். பல ஆயிரம் வழி இருக்கு இங்கே செய்தி நிறுவனம் நடத்தி காசு பார்க்க.
----------------------------------------------------------------------------------------------------------
இன்னும் ஒரு எடுத்துக்காட்டு :

செய்தி : 2016ல் இந்தியா முழுவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் தக்குதல்கள் சம்பவம் காரணமாக (Crime/Atrocities against Scheduled Castes) சுமார் 40743 வழக்குகள் பதிவாகியுள்ளது. இதில் 10426வழக்குகள் பதிவாகியுள்ளது உத்திரபிரதேசத்தில் - கேரளாவில் 810 வழக்குகள் பதிவு..

இதே செய்தி எப்படி வெளியிடப்பட்டது?

 "உத்திரபிரதேசத்தில் அதிகம் தாழ்த்தப்பட்ட மக்கள் தாக்குதல் சம்பவம் என்பது போல்- கேரளாவில் குறைவு என்பது போல்". உண்மையில் கேரளாவில் தாழ்த்தப்பட்டோர் மக்கள் தொகை 30.4 லட்சம் என்றால் உத்திரபிரதேசத்தில் அது 4.13கோடி மக்கள். எனவே முதலில் இப்படி மொட்டையாக ஒப்பிடுவதே தவறு அல்லவா? அதைவிடக் கொடுமை இந்தத் தகவல் வெளியானது 2017 தீபாவளி நேரத்தில். அப்போது தான் பிஜேபி ஆட்சிக்கு வந்திருக்கும் நேரம். ஆக 2016வரை புள்ளி விவரம் கூறுவது அக்கிலேஷ் ஆட்சியின் நிர்வாகம் பற்றியது. அதைக் எடுத்து முன்வைக்கத் தெரியாத அளவிற்குச் செய்தியாளர்கள் வெறுப்பு பிரச்சாரம் இருக்கிறது இங்கே.

இதன் மூலம் பிஜேபி ஆளும் மாநிலங்களில் தாக்குதல் அதிகம் கம்யுனிஸ்ட் ஆளும் மாநிலங்களில் குறைவு என்பது போல் தோற்றத்தை உருவாக்கிவருகிறார்கள்.

அதனால் கூறுகிறேன் "இந்த நாட்டின் கேவலமான ஒரு கூட்டம் இந்தப் பத்திரிக்கையாளர்கள் கூட்டம் தான்".

-----------------------------------------------------------------------------------------------------------

இங்கே தமிழகத்தில் செய்தி நிறுவனம் நடத்தும் நபர்கள் யார் யார் அவர்கள் பின்புலம் கொஞ்சம் தேடி பாருங்கள்...

1.புதிய தலைமுறை - கல்வி தந்தை நடத்தும் செய்தி நிறுவனம். (கல்வியை வைத்து கொள்ளை அடித்தவர் எல்லாம் இன்று கல்வி உலகின் தந்தையானது ஒரு சமூகத்தை கேவலமே தவிர வேறு என்ன!)

இந்த புதிய தருதலை என்றாவது SRM பல்கலைக்கழகம் இத்தனைவருசமாக அடித்த கல்வி கொள்ளையைப் பற்றி பேசுமா???? இத்தனை வருடங்களாக சில நுறு கோடி மெடிக்கல் சீட்கள் விற்பனை செய்ததன் மூலம் அடித்த கொள்ளையை பற்றி விவாதம் நடத்துமா???? நடத்தாது... பின் இதில் வேலை செய்பவர்கள் எந்தப் பத்திரிக்கை துறையின் தர்மத்தின் கீழ் வேலை செய்கிறார்கள்???? ஒரு நல்ல நேர்மையான மனிதன் என்றால் அதைச் செய்தியாக வெளியிட வேண்டும் விவாதம் செய்ய வேண்டும் தானே????

அப்போ இந்தச் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் செந்தில் , காத்திகேயன் , கார்த்திகை செல்வன் எல்லோரும் தங்கள் முதலாளி கொடுக்கும் பணத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் தவிர அதைத் தாண்டி எதுவும் இல்லை. அப்போ அவர்கள் என்ன செய்தி வெளியிடுவர்??? தங்கள் முதலாளி கண் அசைவுக்குக் காத்திருக்கும் ஒரு வளர்ப்பு நா..க்கும் இவர்களுக்கு என்ன வித்தியாசம்???? {என்று மக்கள் நினைக்க மாட்டார்கள் }

2.நியுஸ் 7 - மணல் மாபியா வைகுண்ட ராஜன் அவர்களின் செய்தி நிறுவனம்...

வாய்கிழிய வசனம் பேசும் இந்தச் செய்தி நிறுவனத்தில் வேலை செய்யும் நெல்சன் சேவியர், சுகிதா , மனோஜ் கோபாலன் என்று எவரையாது ஒரு நாள் வாயைத் திறந்து இவர் முதலாளி நடத்தும் இடங்களில் நடந்த IT ரயிட் பற்றிப் பேச சொல்லுங்கள்??? வராது வாயில் வார்த்தையே வராது. காரணம் வார்த்தைகள் இல்லை என்பதால் அல்ல - வயிற்றுக்கு வேறு பிழைப்பு இல்லை எனவே இந்த பிழைப்புக்கு ஏற்ற வேடம் போட வேண்டும் அல்லவா அதான். வேறு எதுவும் இல்லை.

எனவே இப்படி இங்கே உள்ள செய்தியாளார்கள் என்ற பெயரில் பெரும்பாலும் ஒரு வெக்கம் கெட்ட கூட்டம் தான் வாயை வைத்துப் பிழைப்பு நடத்துகிறது என்பது நிதர்சனமான உண்மை...
----------------------------------------------------------------------------------------------------------
இறுதியாக :

இந்த விரைவு செய்தி - தற்போதைய செய்தி இதற்கெல்லாம் மக்கள் ரியாக் செய்வது சமூக வலைதளங்களிக் கொஞ்சம் நிறுத்துக் கொள்ளவும்.  வெளிப்படையாகக் கூறவேண்டும் என்றால்

பொதுவாக இங்கே வசதிவாய்ப்பு கிடைத்த நபர்கள் செய்தி நிறுவனங்களை ஆரம்பிக்க ஆசைப்படுகிறார்கள் அதன் மூலம் அரசை , சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள மனிதர்களை , அரசியல் கட்சிகளை , தொழில் அதிபர்களை என்று அனைவரையும் மிரட்டி வாழமுடியும். ஒரு தனி அரசங்கமே இவர்களால் நடத்த முடியும் எவனும் கேள்வி கேட்பேன் எவன் பேரையும் கெடுப்பேன் என்ற திமிர் பிடித்த அழைக்கிறார்கள் செய்தி நிறுவனம் நடத்தும் முதலாளிகள். ஆனந்த விகடன் எல்லாம் தனி ரகம். தாங்கள் சொல்வது தான் செய்தி என்றும் தங்களை மீறி இங்கே எவனும் இருக்க முடியாது என்ற பச்சை கேவலமான அருவருப்பான எண்ணம் காரணம் தான் பத்திரிக்கை துறை நடத்தத் தவிர வேறு நாட்டின் எந்த நலனும் பற்றி அக்கறையல்ல காரணம்.

நேரடியாக இந்த செய்தியாளர்களை சந்திப்பதைவிட ரஜினி அவர்கள் கருணாநிதி போன்று கேள்வி-பதிலாக தானே உருவாக்கி வெளியிடுவது தான் நல்லது. {வீடியோவாக கூட வெளியிடலாம்.}

{மிக எளிமையாக கூறினால் இங்கே யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் அதை நேர்மையாக எதிர்கொள்ள இந்த திமுக , திக கூட்டத்துக்கு என்றுமே வக்கு இருக்காது. அதன் வெளிபாடு தான் இன்றய செய்தி திரிப்புகள். இது மட்டும் 100% உண்மை. }

இந்தத் தேசத்தை பிடித்த வியாதி செய்தி நிறுவனங்கள் - அவை வெளியிடும் விரைவு செய்திகள்.

-மாரிதாஸ்

நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிக்கை இவ்வளவு ஆர்வம் அவசரம் காட்டுவது ஏன்? உண்மை தான் என்ன? ஆளுநர் மாளிகை தான் காரணமா?....

நிர்மலாதேவி விவகாரத்தில் நக்கீரன் பத்திரிக்கை இவ்வளவு ஆர்வம் அவசரம் காட்டுவது ஏன்? உண்மை தான் என்ன? ஆளுநர் மாளிகை தான் காரணமா?{கேள்வி: பாலா முருகன்}


1.காமராஜர் யுனிவெர்சிட்டி , MGRயுனிவெர்சிட்டி என்று தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் கடந்த 15 வருடங்களில் நீங்கள் எடுத்துப் பார்த்தால் ஒன்று அதிமுக இல்லை திமுக அனுதாபிகள் தான் பதவியில் இருந்திருப்பர். பொதுவாகவே இது ஆளுநர் அதிகார வட்டத்தில் வந்தாலும் - ஆளும் அரசுகளின் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது.

2.உதவி பேராசிரியர் வேலைக்கு 15-20லட்சம் வரை லட்சம் கொடுக்க வேண்டும் , லேப் கிளர்க் வேலை என்றால் கூட 3-4லட்சம் லட்சம் கொடுத்து தான் வேலையைக் கைப்பற்றுகிறார்கள் - பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவிக்கு 2கோடி , 4கோடி என்று பேரம் பேசி தான் விற்பனை செய்யப்படுகிறது. இது தான் உண்மை. இதைத் தாண்டி பேப்பர் சேசிங்க் ஆரம்பித்துக் கூடுதல் மதிப்பெண் வரை அனைத்திற்கும் இங்கே வழியுண்டு. {காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் இங்கே சாதிக்கலாம் என்ற ஒரு கேடுகெட்ட நிலை உருவாக்கிய பெருமை திராவிட கட்சிகளை சாரும்.}

இப்போது விசயம் "நிர்மலாதேவி இரண்டாம் ஆண்டு படிக்கும் பெண்களைத் தவறான வழிக்கு அழைத்தார் என்பது".

3.நிர்மலா தேவி விவகாரமான ஆடியோ வெளியானது 2018 மார்ச் மூன்றாவது நான்காவது வாரங்களில் - அவர் கைது செய்யப்பட்டது 2018 ஏப்ரல் 16ஆம் தேதி. இன்று ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றது 2017 அக்டோபர் 6ஆம் தேதி - அதை அடுத்து அவர் இங்கே வந்து செட்டில் ஆகி நிர்வாகத்தைத் தொடங்க டிசம்பர் ஆகிவிட்டது. {பொதுவாக 30-45 நாட்கள் தேவை ஆளுநர் மாளிகையில் புதிய ஆளுநர் குடியேறி பணிகளை முழுமையாகத் தொடங்க. ரோசய்யா அவர்கள் பதிவு விலகி சுமார் 1.5ஆண்டுகள் கழித்து தான் தமிழகத்திற்கு முழு நேர ஆளுநர் வருகிறார் என்பதால் அது இன்னும் வேலைப் பழு அதிகம்.}

4.இந்த நிலையில் வந்து 2 மாதங்களில் இதை ஆளு நர் செய்கிறார் என்று கூச்சமே இல்லாமல் விசயத்தை அப்படியே தூக்கி அந்த 79 வயது மனிதர் மீது போட்டு எதோ அவர் தான் ஆள் நியமனம் செய்து இந்த வேலையைச் செய்வது போல் தொடர்ந்து அவசரமாக , ஆர்வமாக நக்கீரன் பத்திரிக்கை எழுதுவது எனக்குத் தெரிந்து உண்மையான குற்றவாளியை காப்பாற்ற வேலை செய்வது போல் தான் தோன்றுகிறது. பல்கலைக்கழகத்தின் அனைத்துக் குற்றங்களுக்கும் காரணமே திராவிட கட்சிகள் நியமனம் செய்யும் இந்த Vice Chancellors தான் முக்கிய காரணம்.{Vice Chancellors தான் அனைத்து ஊழல்களில் கிடைக்கும் பணத்தையும் கொண்டு போய் திராவிட கட்சி தலைமைக்கு கொடுத்து அதை பங்குபிறிப்பவர்கள். இவர்களுக்குத் தெரியாமல் நிர்வாகத்தில் எதுவும் நடக்க வாய்ப்பே இல்லை என்பது ஊர் அறிந்த ரகசியம்.}

5.இந்தக் காமராஜர் பலகலைக்கழகத்தின் Vice Chancellors யார் ???? கடந்த பத்து வருடங்கள் யார் என்று கொஞ்சம் தேடுங்கள்

இப்போது ஆளுநர் நியமனம் செய்த செல்லதுரை நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது Vice Chancellors பதவி காலியாக உள்ளது. இதற்கு முன் இருந்தது யார்??? கல்யாணி மதிவாணன் அவர்கள் - இவர் திமுக உருவாகக் காரணமான 5ம் பெரும் தலைவர்களில் முக்கியமானவரான இரா. நெடுஞ்செழியன் அவர்களின் சொந்த மருமகள். அவருக்கு முன் யார் Vice Chancellors??? கற்பக குமாரவேல் இவர் யார் ? இவர் சின்னக் கலைஞர் என்று திமுக கட்சி ஆட்களால் அழைக்கப்பட்ட கோசி மணி அவர்களின் மருமகன். அதற்கு முன் Vice Chancellors இருந்தவர் யார்??? மருதமுத்து இந்த ஆள் யார் தெரியுமா???? திமுகவில் அழகிரி அவர்கள் உச்சத்தில் இருந்த போது நேரடியாகச் சென்று காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு வந்த உத்தமன்.

Vice Chancellors தாண்டி நிர்வாகத்தில் எவர் உள்ளே வரமுடியாத அளவு பலமான இந்தப் பதவிக்கு கடந்த வரலாறுகளில் ஏறக்குறைய திமுக அடிமைகள் தான் பதவிக்கு வந்து சென்றனர். {இதில் கல்யாணி மதிவாணன் அதிமுக திமுக இரண்டுமே கூட ஆதரவு உண்டு என்பது போல் தான் செய்தி} இப்போது என்ன செய்வது???? இவ்வளவு காலம் ஒரு பல்கலைக்கழகத்தை அதன் நிர்வாகத்தை இஞ் இஞ்சாக கொள்ளை அடித்து நாசம் செய்த திராவிட கட்சிகள் எவருக்கும் இங்கே நடக்கும் இந்த நிர்மலாதேவி விவகாரத்தில் பங்கு இல்லை - 2 மாதம் முன் வந்த 79 வயது மனிதர் தான் நேரடியாகக் காரணம்????

இதெல்லாம் கேட்க நகைச்சுவையாக இல்லையா??? பல்கலைக்கழகங்களின் நிர்வாகம் என்றால் என்ன என்று தெரியாதவனுக்கு வேண்டுமானால் நக்கீரன் எழுதிவரும் நிர்மலாதேவி தொடர்கதைகள் உண்மை போல் தோன்றலாம் ஆனால் நக்கீரன் பத்திரிக்கை எவரையோ காப்பாற்ற மொத்த விவகாரத்தையும் மக்கள் மத்தியில் வலுக்கட்டாயமாக்க திசைமாற்ற முயற்சிக்கிறது என்பது தான் எனக்குத் தெரிந்து உண்மை. {எழுதும் அனைத்துமே வட்டாரங்கள் சொன்ன தகவல் என்ற அடிப்படையில் நக்கீரன் எழுதி வருகிறது. இது கருத்து சுதந்திரம் என்று பெயரில் அப்படி நடக்கிறது என்று தகவல் வருகிறது இப்படி நடக்கிறது என்று தகவல்கள் வருகிறது என்று இவர்கள் இஷ்டத்திற்கு எழுதி பரப்புவது இங்கே நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளுக்கு மிக சர்வசாதாரணம்.}

நிர்மலாதேவி அவர்கள் ஜாமினில் வெளியே ஏன் வரவில்லை என்று கவலைப்படும் ஒரே கட்சி தலைமை யார்???? திமுக தலைமை தான் நிர்மலாதேவிக்கு ஏன் பிணை கிடைக்கவில்லை என்று கருத்து கூறியவர். இப்போதைக்கு நிர்மலாதேவி வெளியே வந்தால் அவர் தற்கொலை தான் செய்யவேண்டும். அந்த அளவுக்கு ஒரு கூட்டம் வெளியில் காத்திருக்கிறது. எனவே பாதுகாப்பாக அவர் உள்ளேயே இருந்து எந்த வெறிபிடித்த ஓநாய் அந்த வேலையைச் செய்ய சொன்னது என்ற உண்மையை உடைத்து மொத்த பல்கலைக்கழகங்களின் முகத்திரையைக் கிழிக்க வேண்டும் CBCID .

ஒரு பெரும் குற்றத்திற்கு முக்கிய சாட்சி சிக்கிவிட்டது - ஒன்று அந்தச் சாட்சி கொலை/தற்கொலை செய்யவேண்டும். இல்லை வழக்கை மக்கள் மத்தியில் திசைதிருப்ப தேவையான ஏற்பாடுகள் செய்யவேண்டும். இது திராவிட கட்சிகளின் பொதுவான அரசியல்பாணி. என்னைக் கேட்டால் இந்த நக்கீரன் விடும் கதைகளை எல்லாம் நம்புவதை விடக் கொஞ்சம் CBI வழக்கை முடிக்கும் வரை நீங்கள் அனைவரும் அமைதியாக இருக்கலாம். வேண்டுமானால் பாருங்கள் இந்தத் திராவிட கட்சிகள் எவனாது மாட்டுவான் - அப்போது இதே நக்கீரன் அதை "பிஜேபி உதவியுடன் ஆளுநர் மாளிகை தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பிக்கபார்க்கிறது என்று எழுதுவார்கள்" பொறுத்திருங்கள்.

அப்படி குற்றவாளி ஆளுநர் மாளிகையாக இருந்தால் கட்டாயம் கடும் தண்டனை கொடுக்கப்படவேண்டும். இல்லை என்றால் நக்கீரன் பத்திரிக்கை குழுமத்தை முழுவதும் தடை செய்ய வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய் செய்திகள் குறிப்பிட்ட கட்சிக்காகக் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகப் பரப்பியதற்காக.

இந்த பல்கலைக்கழகத்தின் நடந்த நடக்கும் ஊழல்கள் முறைகேடுகள் அனைத்தும் வெளியே வந்தால் திராவிட கட்சிகள் பெரிய அவப்பெயரை கொண்டு சேர்க்கும் என்பதால் - ஆளுநர் மாளிகை பத்திரிக்கை பத்திரிக்கையாளர்கள் மூலம் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் மிரட்டப்படுவதாகவே நான் கருதுகிறேன். ஆய்வுக்குப் பல அரசு நிர்வாகிகளுடன் செல்லும் ஆளுநர் பாத்ரூம் எட்டிப் பார்த்தார் என்று எழுதும் அளவுக்கு இங்கே பத்திரிக்கை தரம் இருக்கு என்றால் இங்கே எதுவும் சாத்தியம்.

பல்கலைக்கழகங்கள் பற்றி நிர்வாகம் பற்றி நன்கு அறிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன் "தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகமும் கெட்டு நாசம் ஆனதற்கு முழுகாரணம் திராவிட கட்சிகள் - ஒரு தவறு இங்கே நடக்கிறது என்றால் கட்டாயம் இவர்கள் பங்கு இல்லாமல் இருக்கவே இருக்காது என்பது என் நம்பிக்கை".

-மாரிதாஸ்

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....

கோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு.... நீங்கள் உணவுப்பிரியரா ? சுவையான உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பவரா கோவை ம‌ற்றும் ...